'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை |

பிரபல வில்லன் நடிகரான விஜய ரங்கராஜூ மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது காயமடைந்ததாகவும் அதன் பிறகு சென்னையில் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தீக்சிதா, பத்மினி என இரண்டு மகள்கள் இருக்கின்றன. இவர் பிறந்தது புனேயில். வளர்ந்தது மும்பையில். நடிகராக அறிமுகமானது தெலுங்கில். பாலகிருஷ்ணா நடித்த 'பைரவ தீபம்' என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வியட்நாம் காலனி' திரைப்படம் தமிழிலும் பிரபு நடிக்க அதே பெயரில் ரீமேக் ஆன போது மலையாளத்தில் அந்த படத்தில் வில்லனாக ராவுத்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய ரங்கராஜு தான் தமிழிலும் நடித்தார். அதற்கு முன்பு ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட பல படங்களில் சின்னச்சின்ன அடியாள் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு இந்த ராவுத்தர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் இன்னும் நல்ல அறிமுகம் தேடித்தந்தது. இவரது உண்மையான பெயர் ராஜ்குமார் என்றாலும் சினிமாவிற்காக விஜய ரங்கராஜூ என மாற்றிக்கொண்டார். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இவரது மறைவு குறித்த செய்தியை வெளியிட்டு அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.