ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல வில்லன் நடிகரான விஜய ரங்கராஜூ மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது காயமடைந்ததாகவும் அதன் பிறகு சென்னையில் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தீக்சிதா, பத்மினி என இரண்டு மகள்கள் இருக்கின்றன. இவர் பிறந்தது புனேயில். வளர்ந்தது மும்பையில். நடிகராக அறிமுகமானது தெலுங்கில். பாலகிருஷ்ணா நடித்த 'பைரவ தீபம்' என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வியட்நாம் காலனி' திரைப்படம் தமிழிலும் பிரபு நடிக்க அதே பெயரில் ரீமேக் ஆன போது மலையாளத்தில் அந்த படத்தில் வில்லனாக ராவுத்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய ரங்கராஜு தான் தமிழிலும் நடித்தார். அதற்கு முன்பு ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட பல படங்களில் சின்னச்சின்ன அடியாள் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு இந்த ராவுத்தர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் இன்னும் நல்ல அறிமுகம் தேடித்தந்தது. இவரது உண்மையான பெயர் ராஜ்குமார் என்றாலும் சினிமாவிற்காக விஜய ரங்கராஜூ என மாற்றிக்கொண்டார். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இவரது மறைவு குறித்த செய்தியை வெளியிட்டு அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.