ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படத்தை இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கியிருந்தார். வில்லனாக கபீர் துகான்சிங் நடித்திருந்தார். வன்முறை காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் கூட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அது மட்டுமல்ல இந்த படம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றதுடன் வடகொரியாவிலும் பாகுபலி படத்திற்கு அடுத்ததாக வெளியான தென்னிந்திய படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இப்படி வசூல் ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் வெற்றி பெற்ற படத்தில் நடிகர் ரியாஸ் கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக படம் வெளியான போது தான் நடித்த காட்சிகள் ஒன்று கூட படத்தில் இடம் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரியாஸ் கான். ஆனால் படத்தின் இயக்குனர்களை ஹனீப் அதேனி படத்தொகுப்பில் இறுதி வடிவம் கொடுக்கும்போது தவிர்க்க முடியாமல் ரியாஸ் கான் நடித்த காட்சிகளை நீக்க வேண்டியதாகி விட்டது என்று கூறி அவரை சமாதானப்படுத்தி உள்ளார்.
இத்தனைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் ரியாஸ் கான் ஏற்கனவே ஒரு படத்தில் பேசிய 'கேறி ரிவா மோனே' என்கிற வசனத்தை உன்னி முகுந்தனுடன் இணைந்து பேசி ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டார் ரியாஸ் கான். அது அப்போது வைரலாக பரவி மார்கோ படம் பற்றி ரசிகர்களிடம் பேச வைத்தது. ஆனால் அப்படிப்பட்ட ரியாஸ் கான் வெற்றி படத்தில் நடித்தும் கூட இன்று தனது காட்சிகள் அதில் இல்லையே.. இயக்குனரின் முடிவு என்கிற போது நாம் என்ன செய்வது” என்று தனது விரக்தியை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.