ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். தனக்கு மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லும் தைரியம் கொண்ட கங்கனா திரைப்படங்களிலும் அதுபோன்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'எமர்ஜென்சி' படத்தில் மறைந்த பிரதமர் இந்திராவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா. இந்த படத்தை அவரே இயக்கியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படம் தயாரிப்பில் இருந்த நிலையில் பொருளாதார பிரச்னை, படத்தை திரையிட கூடாது என எழுந்த எதிர்ப்பு, சென்சார் கெடுபிடி என அனைத்தையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலும் மிதமான வேகத்தில் தான் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் பற்றி கங்கனா சமீபத்தில் கூறும்போது, "ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்கள் இந்த படத்திற்காக பணம் போடுவதை நிறுத்திக் கொண்டனர். உதவுவதாக சொன்ன ஓடிடி நிறுவனங்கள் கூட ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டன. வேறு வழியின்றி எனது வீட்டை அடமானம் வைத்து இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக 'மணிகர்ணிகா' என்கிற வரலாற்று படத்தை இயக்கிய கங்கனா, இரண்டாவது முறையாக இயக்கியுள்ள படம் தான் இந்த எமர்ஜென்சி என்பது குறிப்பிடத்தக்கது.