தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஒரு காலத்தில் வாழ்ந்த கேரக்டர்களை இன்னொரு காலத்து கதையோடு இணைப்பது சினிமாவில் ஒரு ஸ்டைல். உதாரணத்திற்கு இக்காலத்தில் காந்தி மீண்டும் பிறந்து வந்து இன்றைய நாட்டு நடப்புகளை பற்றி பேசுவது மாதிரியான படம் பெரும்பாலான மொழிகளில் வந்துள்ளது. சிவபெருமான் இப்போது பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்கிற கதைதான் வி.கே.ராமசாமி நடித்த 'ருத்ர தாண்டவம்'. இப்படி நிறைய இருக்கிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக 1942ல் வெளிவந்த படம் 'தமிழறியும் பெருமாள்'.
வடநாட்டை சேர்ந்த கவிஞரான காளிதாசின் கதை இந்த படம். ஆனால் இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த நக்கீரரும், அவ்வையாரும் வருவார்கள். இவர்கள் மூவரும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் சந்தித்து உரையாடுவது, விவாதிப்பது மாதிரியான காட்சிகள் படத்தில் இடம்பெற்றது.
இது ஒரு புறம் பாராட்டப்பட்டாலும் இன்னொருபுறம் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த நாளில் புகழ்பெற்ற திரை எழுத்தாளர் இளங்கோவன் இதன் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார். நியூடோன் ஸ்டூடியோவில் ஆர்.எம். ராமநாதன் செட்டியாரால் தயாரான இந்தப் படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார்.
ராமச்சந்தர் என்ற பெயருடனேயே படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதன் கதாநாயகி எம்.ஆர். சந்தானலட்சுமி. இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்தார். மேலும் வி.ஏ.செல்லப்பா, ஆர்.பாலசுப்பிரமணியம், டி.எஸ். துரைராஜ், எம்.எஸ். தேவசேனா, எம்ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி முதலானோரும் இதில் நடித்தார்கள். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சரஸ்வதி ஸ்டோர் நிறுவனம் சார்பில் இந்தப் படத்திற்கான இசையமைப்பைச் செய்திருந்தார்கள். படத்தில் மொத்தம் 22 பாடல்கள். பாடல்கள் அனைத்தையும் உடுமலை நாராயணகவி எழுதினார் .