தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் கே.பாக்யராஜும், மணிவண்ணனும் ஒரே காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்கள். பாக்யராஜ் பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து வந்து பல படங்களை இயக்கிய பிறகு இயக்குனர் ஆனவர், மணிவண்ணன். இவர் தீவிர இளையராஜா ரசிகர். இளையராஜாவிற்கும் மணிவண்ணனை பிடிக்கும். இதனால் தயாரிப்பாளர் கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்தார். அப்படி கிடைத்த முதல் வாய்ப்புதான் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம்.
மணிவண்ணனின் முதல் படமே வெள்ளி விழா கண்டது. அழகான மோகனுக்கு அழகில்லாத அருக்காணி சுஹாசினியை மணமுடித்து விடுவார்கள். மோகன் ஸ்டைலான ராதாவோடு வாழ்வார். அந்த வீட்டுக்கு சுஹாசினியை வேலைக்காரியாக அழைத்து செல்வார் மோகன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. படத்தில் சுஹாசினியின் நடிப்பு பேசப்பட்டது. தேசிய விருதுகூட கிடைக்கும் என்றார்கள்.
இந்தப் படம் வெளியானபோது வெளியிட்ட விளம்பரங்களில் மணிவண்ணனும், கே.பாக்யராஜும் ஒருவரை மோதிக் கொள்வது போன்று வாளோடு நிற்கும் படத்தை போட்டு பாரதிராஜாவின் சிஷ்யர்களில் சிறந்தவர் யார்? கே.பாக்யராஜா, மணிவண்ணனா? என்று கேப்சன் போட்டிருந்தார். இது ஒரு வேடிக்கையான விளம்பரம் என்று சொன்னாலும், பாரதிராஜாவிடம் பணியாற்றிய காலத்தில் இருவருக்கும் இடையில் ஒரு மவுனயுத்தம் நடந்து கொண்டிருந்தது அதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரம் என்றும் சொல்வார்கள்.