ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசனின் டாப் டென் படங்களில் ஒன்று 'தேவர் மகன்'. கமல் திரைக்கதை வசனம் எழுத, பரதன் இயக்கினார். சாதி ரீதியான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரும் வெற்றிகண்ட 'தேவர் மகன்' பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, கமல்ஹாசன், இளையராஜா, பரதன், பி.சி.ஶ்ரீராம் போன்ற ஆளுமைகளுக்கு மத்தியில் பஞ்சவர்ணமாகக் கவனம் பெற்ற ரேவதி, அந்தப் படத்துக்காகத் தேசிய விருதையும் வென்றார்.
ஆனால் பஞ்சவர்ணமாக முதலில் நடித்தவர் மீனா. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் மீனாவின் நடிப்பிலும், தோற்றத்திலும் கமலுக்கு நம்பிக்கை வரவில்லை. 'பஞ்சவர்ணம் அக்ரஹாரத்து பெண்ணல்ல, சாதாரண குடியானவன் பொண்ணு', என்று மட்டும் இயக்குனர் பரதனிடம் சொன்னார் கமல்.
பரதன் உடனடியாக பிரியதர்ஷனின் மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த ரேவதியை தொடர்பு கொண்டு அழைத்தார். இயக்குனர் பிரியதர்ஷனும் 'கமல்ஹாசன் ஸ்கிரிப்ட் என்றால் அது உனக்கு முக்கியமான படமாக இருக்கும்' என்று தனது பட கால்ஷீட்களை விட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தார். படத்தின் பஞ்சவர்ணமாகவே வாழ்ந்தார் ரேவதி. அவருக்கு அந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.