ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மக்கள் திலகம் எம்ஜிஆர் பிற்காலத்தில் புராண கதாபாத்திரங்களில் நடித்தில்லை. ஆனால் அவரது ஆரம்பகால படங்களில் இந்திரன், நாரதன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் நடித்ததிலேயே அதிக காட்சிகள் கொண்ட பெரிய கதாபாத்திரம் 'தாசி பெண்' என்ற படத்தில் அவர் நடித்த சிவன் கேரக்டர்.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதி நாடகமாக நடத்தப்பட்டு வந்த 'தாசி பெண்' என்ற கதை திரைப்படமானது. இந்த படத்திற்கு தாசி பெண், தும்பை மகாத்மியம், ஜோதிமலர், டான்சிங் கேர்ள் என 4 தலைப்புகள் வைக்கப்பட்டது. எல்லீஸ் டங்கன் இயக்கினார்.
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்ட ஒரு அழகான பெண் தேவதாசியாக மாறி கோவிலில் சிவனுக்கு பணிவிடையை செய்ய விரும்புகிறாள். ஆனால் அந்த அழகான பெண்ணை அந்த ஊர் பண்ணையார் தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள துடிக்கிறார். இதனால் பல துன்பங்களுக்கு ஆளாகும் அந்த பெண்ணை சிவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. கடைசியில் அந்த பெண்ணை தும்பை பூவாக மாற்றி தனக்கு அந்த பூவை கொண்டுதான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் நியமனம் செய்தார் என்பதுதான் படத்தின் கதை.
இதில் எம்.ஆர்.சந்தானலட்சுமி, எம்ஜிஆர், டி.ஆர்.மகாலிங்கம் உள்ளிட்டோர் நடித்தனர். அந்த காலத்தில் குறைந்தது 16 ரீல் படங்கள் வந்து கொண்டிருந்தபோது இந்த படம் 13 ரீல் படமாக இருந்தது. இதனால் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடித்த 'கிழட்டு மாப்பிள்ளை' என்ற காமெடி குறும்படம் இணைக்கப்பட்டது.