சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இடையில் ஒரு படத்தை தயாரிக்க போய் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். சில மாதங்களாக இவர் வாடகை தரவில்லை என ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக கஞ்சா கருப்புக்கும், ரமேஷிற்கும் பிரச்னை உருவாகி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டனர்.
ரமேஷ் அளித்துள்ள புகாரில் ‛‛கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துகிறார். வீட்டை காலி பண்ண சொல்லியும், வாடகை தரச் சொல்லி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க கஞ்சா கருப்பு அளித்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் உரிமையாளர் ரமேஷ் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளார். தனது உடைமைகளையும் சேதப்படுத்தி உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கஞ்சா கருப்பு தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு போலீஸ் உடன் சென்று பார்த்துள்ளார். அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி இருக்கும் அவர், தனது கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை என்றும், 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை என போலீஸில் கதறி உள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.