ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவிலும், ஆஸ்கர் விருது பெறும் அளவிலும் கொண்டு சென்றவர் இயக்குனர் ராஜமவுலி. அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள அலுமினிய பேக்டரியில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் கென்யா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்தப் படத்திற்காக கலைஞர்கள் அனைவரிடமும் 'வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம்' போடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 'Non-disclousure Agreement' சுருக்கமாக 'NDA' என்ற இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுபவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது என்பது அர்த்தம். அதாவது படத்தின் ரகசியம் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்படி அவர்கள் மூலம் ஏதாவது ரகசியம் வெளியே போனால், அதற்கு நஷ்டஈடாக பெரும் தொகை செலுத்த வேண்டி வரும். அதோடு படப்பிடிப்புத் தளத்தில் கண்டிப்பாக மொபைல் போன் எடுத்து வரக் கூடாது உள்ளிட்ட சில முக்கிய 'கண்டிஷன்கள்' போடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருட காலம் நடைபெற உள்ளதாம். அதற்குள் அக்காட்சிகளை வேறு யாரும் காப்பி அடித்துவிடக் கூடாது என்பதால்தான் இப்படியான ஒப்பந்தம் என்கிறார்கள்.