ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு மாத காலமாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிவராஜ்குமார் நேற்று முன்தினம் கர்நாடகா திரும்பினார்.
அதையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, சிவராஜ்குமாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது மீடியாக்களை சந்தித்து சிவராஜ்குமார், ''புற்றுநோய் என்று மருத்துவர்கள் சொன்னதும் பயந்துவிட்டேன். ஆனால் ரசிகர்களும், நண்பர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து பக்கபலமாக இருந்தார்கள். இப்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமாகி வருகிறேன். அதனால் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி ரசிகர்களை மகிழ்விப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் சிவராஜ் குமார்.