ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த 2016ம் ஆண்டு சந்தானம் நடித்து வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. அதன் பிறகு 2019ம் ஆண்டு வெளியான அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. பின்னர் 2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்தார். இது சந்தானத்தின் 125வது படமாகும். அதையடுத்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்து வந்தார் சந்தானம்.
இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதை ஒரு புகைப்படத்துடன் படக்குழு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை மே மாதம் ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதே தேதியில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ என்ற படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது .