ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக இயக்கிய டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய உயரத்தை தொடாவிட்டாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று சீரான ஓட்டத்தில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
துப்பறியும் டிடெக்டிவ் கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படத்தின் திருப்புமுனைக்கு காரணமான நெகட்டிவ் சாயல் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வினீத். தமிழில் காதல் தேசம் படம் மூலம் பிரபலமான வினீத் நீண்ட நாளைக்கு பிறகு சந்திரமுகி படத்தில் தனது இருப்பை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.
அதன்பிறகு சமீப வருடங்களாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வினீத். அந்த வகையில் வினீத் படத்தில் இடைவேளைக்கு பின் வந்து செல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபல முகம் தேவை என கவுதம் மேனன் முடிவு செய்தபோது தனது பெயரை மம்முட்டி தான் அவரிடம் சிபாரிசு செய்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வினீத்.
“கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பது எனது கனவாக இருந்தது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட் படித்து விட்டு தான் ஒப்புக்கொள்வேன் என்றாலும் கவுதம் மேனன் படம் என்பதால் கேட்ட உடனே ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்ல மம்முட்டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முதன்முதலாக நடிக்கிறேன் என்பதும் கூட இன்னொரு காரணம்” என்று கூறியுள்ளார் நடிகர் வினீத்.