பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகனாக 25 படங்கள் தாக்குப் பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அழகிருந்தும், திறமையிருந்தும் அதற்குள்ளாகவே காணாமல் போன நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியிருக்கும் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்கள் ஒரே கால கட்டத்தில் 25வது படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியம்தான்.
சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரது 25 படங்கள் பற்றிய அப்டேட்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகின. சிவகார்த்திகேயனின் 25வது படமாக 'பராசக்தி', ஜிவி பிரகாஷ்குமாரின் 25வதுபடமாக 'கிங்ஸ்டன்', விஜய் ஆண்டனியின் 25வது படமாக 'சக்தித் திருமகன்' ஆகியவை அமைந்துள்ளன.
சிவகார்த்திகேயன் 2012ல் வெளிவந்த 'மெரினா' படம் மூலமும், ஜிவி பிரகாஷ்குமார் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலமும், விஜய் ஆண்டனி 2012ல் வெளிவந்த 'நான்' படம் மூலமும் நாயகர்களாக அறிமுகமானார்கள். இவர்களில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைப்பாளராக இருந்த நடிகர்களானவர்கள். சிவகார்த்திகேயனும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பாடல்களையும் எழுதியிருக்கிறார்.