ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது 'கிங்ஸ்டன்' எனும் அவரது 25வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜி.வி. பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கமல் மாதிரி தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா எடுப்பார்கள். அவர் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன்.
என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கமல் தான் தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினேன். அதை அவரிடம் சொன்னதும் உடனே கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வாழ்த்தினார். கமலுக்கு என்மீது அன்பும், அக்கறையும் உண்டு. ஒரு போராட்டத்திற்கு நான் குரல் கொடுத்த போது என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ரொம்ப தைரியமாக பண்ணுறீங்க. உங்கள் அரசியல் பார்வை ரொம்ப பிடித்துள்ளது, " என தெரிவித்துள்ளார்.