சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'பிக் பாஸ்' 6வது சீசன் மூலம் புகழ் பெற்றவர் ஆயிஷா. ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுதவிர 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தற்போது இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றின் மூலம் சினிமா ஹீரோயின் ஆகியுள்ளார்.
அப்ரிஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாபர் இயக்கும் இந்தப் படத்தில் விடாமுயற்சி கணேஷ் சரவணன் நாயகனாக நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். சதீஷ்குமார் துரை ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் ஜாபர் கூறியது: இது காமெடி திரில்லர் ஜார்னரில் உருவாகும் படம். 2018ம் ஆண்டு கல்லூரி முடித்த காதலர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் பிரிகிறார்கள். இப்போது அவர்கள் வேறு ஒரு ஜோடியுடன் திருமணமாகி வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியொரு சூழலில் இவர்கள் ஓரிடத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள். அது ஒரு அறை. அந்த அறை திடீரென லாக் ஆகிவிடுகிறது. அந்த சமயத்தில் உறவினர்கள் பலரும் அங்கு வந்துவிட, கதவு திறக்கப்பட்டு இவர்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற கான்செப்ட்டில் படம் செல்லும். கணேஷ் சரவணனின் மனைவியாக ஆயிஷா நடிக்கிறார்” என்றார்.