ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிக் பாஸ்' 6வது சீசன் மூலம் புகழ் பெற்றவர் ஆயிஷா. ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுதவிர 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தற்போது இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றின் மூலம் சினிமா ஹீரோயின் ஆகியுள்ளார்.
அப்ரிஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாபர் இயக்கும் இந்தப் படத்தில் விடாமுயற்சி கணேஷ் சரவணன் நாயகனாக நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். சதீஷ்குமார் துரை ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் ஜாபர் கூறியது: இது காமெடி திரில்லர் ஜார்னரில் உருவாகும் படம். 2018ம் ஆண்டு கல்லூரி முடித்த காதலர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் பிரிகிறார்கள். இப்போது அவர்கள் வேறு ஒரு ஜோடியுடன் திருமணமாகி வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியொரு சூழலில் இவர்கள் ஓரிடத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள். அது ஒரு அறை. அந்த அறை திடீரென லாக் ஆகிவிடுகிறது. அந்த சமயத்தில் உறவினர்கள் பலரும் அங்கு வந்துவிட, கதவு திறக்கப்பட்டு இவர்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற கான்செப்ட்டில் படம் செல்லும். கணேஷ் சரவணனின் மனைவியாக ஆயிஷா நடிக்கிறார்” என்றார்.