வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை ஸ்டைலிஷான பாணியில் இயக்கி வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்து மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக பல சேனல்களுக்கு அவர் பேட்டி கொடுத்து வந்தார். அப்போது அவர் தனுஷை வைத்து இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்து கேட்டபோது, கிண்டலாக, “எந்த படத்தைப் பற்றி கேட்டீர்கள்? அதில் ஏதோ ஒரு பாடல் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. அது என் படம் அல்ல.. யாரோ ஒருவர் செய்தது” என்று நகைச்சுவையாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.. அதாவது அந்த படத்தில் தனுஷின் குறுக்கீடு மிகப்பெரிய அளவு இருந்தது என்பது தான் அவர் சொல்ல வந்தது.
இந்த நிலையில் சமீபத்திய இன்னொரு பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறும்போது, “எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி நான் கூறியது சும்மா ஒரு தமாஷுக்காக. என்னுடைய படங்களிலேயே நான் விரும்பியபடி எடுக்க முடியாமல் போன படம் அது மட்டும் தான். கடைசியாக 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை வெறும் ஐந்திலிருந்து 10 நாட்களில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது எனக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தான்.. இதுவே வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்து இந்த கருத்தை நான் சொல்லியிருந்தால் அது தவறாக போயிருக்கும். என்னுடைய படம் என்பதால் ஜஸ்ட் லைக் அதை ஒரு ஜாலிக்காக சொன்னேன்” என்று கூறியுள்ளார்.




