தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகை தமன்னா, ஹிந்தியில் 'ஸ்ட்ரீ 2' படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார். தற்போது அசோக் தேஜா இயக்கத்தில் 'ஒடேலா 2' படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில், ''நான் கேரவனில் இருந்தபோது, மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். என் கண்கள் குளமாகின. படப்பிடிப்புக்காக மேக்அப் உடன் மஸ்காரா (கண் மை) போட்டிருந்ததால், அந்த சமயத்தில் நான் அழவில்லை. இது ஒரு உணர்வு மட்டுமே, அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன்பிறகு, சோகத்தில் இருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாற்றிக்கொண்டேன்'' என்றார்.
இந்த மோசமான நிகழ்வு எந்த படப்பிடிப்பின்போது என்றோ, என்ன நடந்தது என்றோ தமன்னா குறிப்பிடவில்லை.