கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நுழைந்தவர் நடிகை சாய் பல்லவி. மலையாளம் மட்டுமல்லது தற்போது தென்னிந்திய அளவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக மாறிவிட்டார். நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான அமரன் படத்தில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து தண்டேல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய்பல்லவியை பொறுத்தவரை அவரது அதிரடி நடனத்திற்காக பிரபலமானவர். அப்படிப்பட்டவரிடம் நீங்கள் எந்த ஹீரோவுடன் இணைந்து போட்டி நடனம் ஆட வேண்டும் என்றால் எந்த ஹீரோவுடன் ஆடுவீர்கள் என கேட்டதற்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நடிகர் விஜய்யுடன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
இது குறித்து அவர் கூறும் போது, “யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதற்கோ அவர்கள் பாடல்களுக்கு ஆடுவதையோ நான் ரொம்பவே விரும்புவேன். எப்போதும் விஜய்யின் நடனத்தை நான் ரசித்து பார்ப்பேன். நாமெல்லாம் ஒரே குரூப் என்பது போல உணர முடிகிறது” என்று கூறியுள்ளார்.