தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது காலில் அடிபட்டு சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. என்றாலும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சக்கர நாற்காலியில் சென்று வருகிறார். இதற்காகவே தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தனது வீட்டில் டி-ஷர்ட் அணிந்து தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அந்த டி-ஷர்டில் கனிவுடன் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இன்றைய நாட்களில் கருணை என்பது மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. நான் கருணை மற்றும் அதனுடன் வரும் அனைத்தையும் சேர்த்து தேர்வு செய்கிறேன். நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரு காரில் ஏறுவது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. அதில் விஜய் தேவரகொண்டா விறுவிறு என காரில் ஏறுகிறார்.. அவர் கூடவே நொண்டியபடி வரும் ராஷ்மிகாவுக்கு காரில் ஏறுவதற்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து பலரும் விஜய் தேவரகொண்டாவை வலைதளங்களில் விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஷ்மிகாவின் இந்த பதிவு இருக்கும் என தெரிகிறது.
மராட்டிய மன்னர் சாம்பாஜியின் வாழ்க்கையை தழுவி ‛சாவா' என்ற ஹிந்தி படம் உருவாகி உள்ளது. இதில் மகாராணி ஏசுபாய் வேடத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படம் பிப்., 14ல் காதலர் தினத்தில் திரைக்கு வருகிறது. இது தவிர, சிக்கந்தர், குபேரா, தி கேர்ள் பிரண்ட் போன்ற படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.