கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எனது கனவுத் திட்டம் : இயக்குனர் பொன்ராம் பேட்டி | பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

கடந்தாண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இருந்தது. இப்படம் உலகளவில் ரூ.325 கோடிக்கு மேல் வசூல் சாதனையை ஈட்டியது. தற்போது அமரன் படம் திரைக்கு வந்து 100 நாட்களை நெருங்கும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "சிப்பாய் விக்ரம் இல்லாமல் 'அமரன்' முழுமையடையாது என்பது தான் உண்மை. இக்கதையில் இரு தைரியமான ராணுவ வீரர்களின் வரலாற்றைச் சொல்ல முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிப்பாய் விக்ரமின் கதையை உலகிற்கு 'அமரன்' திரைப்படம் மூலம் சொல்ல அனுமதியளித்த அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மைக்கு எனது மனமார்ந்த நன்றி." என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.