சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கடந்தாண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இருந்தது. இப்படம் உலகளவில் ரூ.325 கோடிக்கு மேல் வசூல் சாதனையை ஈட்டியது. தற்போது அமரன் படம் திரைக்கு வந்து 100 நாட்களை நெருங்கும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "சிப்பாய் விக்ரம் இல்லாமல் 'அமரன்' முழுமையடையாது என்பது தான் உண்மை. இக்கதையில் இரு தைரியமான ராணுவ வீரர்களின் வரலாற்றைச் சொல்ல முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிப்பாய் விக்ரமின் கதையை உலகிற்கு 'அமரன்' திரைப்படம் மூலம் சொல்ல அனுமதியளித்த அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மைக்கு எனது மனமார்ந்த நன்றி." என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.