400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
கடந்தாண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இருந்தது. இப்படம் உலகளவில் ரூ.325 கோடிக்கு மேல் வசூல் சாதனையை ஈட்டியது. தற்போது அமரன் படம் திரைக்கு வந்து 100 நாட்களை நெருங்கும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "சிப்பாய் விக்ரம் இல்லாமல் 'அமரன்' முழுமையடையாது என்பது தான் உண்மை. இக்கதையில் இரு தைரியமான ராணுவ வீரர்களின் வரலாற்றைச் சொல்ல முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிப்பாய் விக்ரமின் கதையை உலகிற்கு 'அமரன்' திரைப்படம் மூலம் சொல்ல அனுமதியளித்த அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மைக்கு எனது மனமார்ந்த நன்றி." என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.