தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒரு படத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைமாக்ஸ் வைத்து ரசிகர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அந்த கிளைமாக்சோடு படத்தை வெளியிடுவது பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு வழக்கம். இதுவும் அபூர்வமாகத்தான் நடக்கும். குறிப்பாக கே.பாக்யராஜ், மணிரத்னம் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழில் இதனை தொடங்கி வைத்த படம் 'மஹாமாயா' (1944).
பிற்காலத்தில் பஞ்சு அருணாசம், ஆர்.செல்வராஜ், சுஜாதா போன்று அந்தக் காலத்தில் திரைப்பட நட்சத்திர எழுத்தாளராக இருந்தவர் இளங்கோ. அன்றைய முன்னணி நட்சதத்திரங்களான தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு ஆஸ்தான எழுத்தாளராக இருந்தார். இளங்கோவின் கதை என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பார்கள்.
அப்படிப்பட்ட இளங்கோ எழுதிய கதைதான் 'மஹாமாயா'-. இதை எழுதுவதற்கு அவர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். கதையை எழுதி முடித்ததும் அதற்கு மூன்று கிளைமாக்சை எழுதினார். அதனை தயாரிப்பாளர் எம்.சோமசுந்தரம், இயக்குனர் டி.ஆர்.ரகுநாத்திடம் கொடுத்தார். அவர்களுக்கும் எந்த கிளைமாக்சை வைப்பது என்பதில் குழப்பம். இதனால் மூன்று கிளைமாக்சையும் படமாக்கி, பிறகு அதனை ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், திரையுலகினருக்கும் போட்டு காட்டி பெரும்பாலானவர்கள் சொன்ன கிளைமாக்சையே படத்தில் வைத்தார்கள்.
மன்னரின் வாளில் எந்த பெண்ணாவது மாலை அணிவித்து விட்டால் அந்த பெண் மன்னருக்கு சொந்தம் என்பது பொதுவான நியதி. மன்னர் பி.யு.சின்னப்பா வாளுக்கு மஹாமாயாவான கண்ணாம்பா விளையாட்டாக மாலை அணிவித்து விடுகிறார். அப்போது அது விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கண்ணாம்பாவுக்கு திருமணமான பிறகு அவரது அழகில் மயங்கும் சின்னப்பா வாளுக்கு மாலையிட்டதால் அவர் எனக்கே சொந்தம் என்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த படத்தில் பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, எம்.ஜி.சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், டி.பாலசுப்ரமணியம், எஸ்.வி. சஹஸ்ரநாமம், எம்.கே.மீனலோச்சனி, 'பேபி' டி.டி.குசலாம்பாள், டி.ராஜ்பாலா மற்றும் டி.ஆர்.பி.ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.