ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் என முக்கியமான மூன்று சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக சேர்ந்த பின்புதான் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரிப்பது வழக்கம்.
கடந்த சில வருடங்களாகவே படங்களை வெளியிடுவதில் எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளிவருகின்றன. அவற்றில் பல படங்கள் ஒரு வாரம் வரை கூட தாக்குப் பிடிப்பதில்லை. திடீரென பெரிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்படுவதும், தள்ளி வைக்கப்படுவதும் மற்ற படங்களின் வெளியீட்டையும் பாதிக்கிறது. அந்த பெரிய படங்களுக்குத்தான் தியேட்டர்களும் முன்னுரிமை கொடுக்கின்றன.
நாளை பிப்ரவரி 14ம் தேதி 10 படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவந்தால் இருக்கும் 1000 தியேட்டர்களில் அத்தனை படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
ஒரு படத்தை எடுத்து முடிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தாலும், அவற்றை வெளியிடுவதில்தான் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் பொதுவான கருத்து. ஆனால், முக்கியமான மூன்று தயாரிப்பாளர் சங்கங்களும் இந்த வெளியீட்டுத் தேதி குறித்து ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கத் தவறிவிட்டன என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இனி வரும் காலங்களில் அதற்கு ஏதாவது சரியான வழியைச் செய்யவில்லை என்றால் முன்னணி நடிகர்கள் அல்லாத மற்ற படங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கங்களோடு, வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்காரர்கள் சங்கம் ஆகியோரும் இணைந்து பேசி இதற்கு ஒரு சுமூக முடிவை எட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.