ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாகசைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்த படம் ‛தண்டேல்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கில் நிகில் சித்தார்த்தாவை வைத்து ‛கார்த்திகேயா-2' படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் சந்து மொண்டேட்டி.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவை சந்தித்து தனது அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்ட சூர்யா, இன்னும் அந்த படத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லையாம். அப்படி அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்தால் முதலில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி விட்டு அதன்பிறகுதான் கார்த்திகேயா- 2 படத்தை இயக்குவாராம் சந்து மொண்டேட்டி. மேலும் தற்போது சூர்யா, ‛ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.