ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கில் நுழைந்து அங்கும் வெற்றி பெற்று, தற்போது ஹிந்தியிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான், வாரிசு' படங்களில் நடித்தவர் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் 'குபேரா', ஹிந்தியில் தயாராகும் 'சிக்கந்தர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா நடித்து கடந்த வாரம் வெளிவந்த ஹிந்திப் படமான 'சாவா' வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியுடன் சேர்த்து ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.
2023ல் அவர் ஹிந்தியில் கதாநாயகியாக நடித்து வெளிவந்த 'அனிமல்' படம் 900 கோடியை வசூலித்தது. அடுத்து கடந்த 2024ம் வருடம் வெளிவந்த 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமா வசூலித்து சாதனை புரிந்தது. தற்போது 2025ல் அவரது முதல் வெளியீடான 'சாவா' படம் 100 கோடியைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் வெளியாக உள்ள 'குபேரா, சிக்கந்தர்' ஆகிய படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், இந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ராஷ்மிகா வசூல் நாயகி எனப் பெயர் பெற்றுவிடுவார்.