தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவர் ரஞ்சன். பணக்கார வீட்டு செல்ல மகன், நிறைய படித்தவர், குதிரையேற்றம், வாள் சண்டை, குத்து சண்டை, விமான பைலட் என நிறைய தகுதிகள் அவரிடம் இருந்தது.
ரஞ்சனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு பனிப்போர் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஞ்சன் ஹீரோவாகவும், எம்.ஜி.ஆர் வில்லனாகவும் நடித்த படம்தான் 'சாலிவாகனன்'. இதில் சாலிவாகனனாக ரஞ்சனும், விக்ரமாதித்தனாக எம்ஜிஆரும் நடித்தனர்.
இருவரும் வாள் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி இருந்தது. இதில் முறைப்படி வாள் சண்டை கற்ற ரஞ்சனுக்கு எதிராக எம்ஜிஆர் நாடகத்தில் கற்றதை வைத்து மோதினார். இருவரும் நிஜமாகவே மோதிக் கொண்டார்கள். ரஞ்சன் மூர்கத்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துவதாக எம்ஜிஆரும், எம்ஜிஆர் மூர்க்த்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துதாக ரஞ்சனும் மாறி மாறி இயக்குனரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு சண்டை இயக்குனர் சொல்படி மட்டுமே நடந்து கொள்வது என்று முடிவாகி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
பி.என்.ராவ் இயக்கிய இந்த படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, கே.எல்.வி.வசந்தா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.எஸ்.பாலையா மற்றும் பலர் நடித்தனர். நாகர்கோவில் கே.மகாதேவன் இசை அமைத்தார். இது 1944ல் தயாரிக்கப்பட்டு 1945ன் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.