குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஒரு கையில் மதுக் கோப்பை, மறு கையில் தாய்ப்பால் 'பம்ப்' வைத்துக் கொண்டு ராதிகா ஆப்தே வெளியிட்ட போட்டோ பல்வேறு கமெண்ட்டுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
'கபாலி' பட நடிகையான ராதிகா ஆப்தே எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவருக்கு விருப்பமானவற்றை செய்யும் குணம் கொண்டவர். இதற்கு முன்பும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு ராதிகா ஆப்தே கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாக லண்டனில் நடைபெற்ற 'பாப்டா' விருது விழங்கும் விழா அமைந்தது. அதில் கலந்து கொண்ட போது ராதிகா ஆப்தே, “பாப்டா'வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். எனது தாய்ப்பாலை பம்ப் செய்யும் நேரத்தில் நிகழ்ச்சி நேரம் இருந்தது. நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த நடாஷா நான் தாய்ப்பாலை பம்ப் செய்ய வாஷ்ரூமிற்கு கூடவே வந்தார், அதோடு ஷாம்பெயினையும் கொண்டு வந்தார். ஒரு புதிய அம்மாவாக இருப்பதும், வேலை செய்வதும் கடினம். இந்த அளவிலான கவனிப்பு நமது திரைப்படத் துறையில் அரிதானது, மிகவும் பாராட்டத்தக்கது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவின் இந்தப் பதிவும், புகைப்படமும் ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறது.