'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
தமிழில் ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. தனுஷை வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க இருந்தார். இதற்கான அறிவிப்பு விழா சென்னையில் நடந்த நிலையில் சில பிரச்னையால் இந்த படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க அருண் மாதேஸ்வரன் முயற்சித்து வந்தார். இதனை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அக்ஷய் குமாரை சந்தித்து இவர் கதை கூறியுள்ளார். அக்ஷய் குமாருக்கும் கதை பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.