ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மணிவண்ணன் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மிகப்பெரிய வெற்றியே அவரது வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. ஆனால் அவரது முதல் படம் ‛கோபுரங்கள் சாய்வதில்லை' அல்ல.
இந்தப் படத்திற்கு முன்பே அவர் இயக்கி முடித்த படம் 'ஜோதி'. இதில் மோகன், அம்பிகா, சத்யஜித், சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, வினு சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஒரு கிராமத்திற்கு நாடகத்தில் நடிக்க வரும் ஹீரோ அந்த கிராமத்தில் டீக்கடை நடத்தும் பெண்ணை காதலிப்பது தான் கதை. எந்த எதிர்ப்பும் இல்லாத இவர்கள் காதலுக்கு செயற்கையாக பல காரணங்களை காட்டி திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததால் படம் படுதோல்வி அடைந்தது. இளையராஜாவின் இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண பிரச்னைகள் காரணமாக படம் வெளியாகாமல் இருந்து இரண்டாவது படமாக தாமதமாக வெளியானது.
இந்தப் படம் மணிவண்ணனுக்கு முதல் படமாக அமைந்திருந்தால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். ஜோதி படம் தான் அவரது வெற்றிக்கு வழி விட்டு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை முதல் படமாக கொடுத்தது.