தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
சந்தானம் நடித்து 2017ல் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதன்பின் தமிழில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி' ஆகிய படங்களில் நடித்தார். மராத்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த பான் இந்தியா கன்னடப் படமான 'மார்ட்டின்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஹர்ஷவர்தன் என்பவரைத் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார் வைபவி சாண்டில்யா. திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களுடன், ஹர்ஷவர்தனும் நானும் அன்பு மற்றும் ஒற்றுமையின் இந்த அழகான பயணத்தைத் தொடங்கி உள்ளோம். அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.