கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா. அப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். 200 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் 500 கோடி வசூலித்தது. மீண்டும் சுகுமார் இயக்கத்தில் அதே கூட்டணி புஷ்பா -2 படத்தில் இணைந்தார்கள். 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 1800 கோடி வரை வசூலித்தது.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் அளித்துள்ள ஒரு பேட்டியில், புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற பெண் காட்சி குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், புஷ்பா -2 படத்தின் ஒரு பாடல் காட்சியில் புடவை அணிந்து பெண்ணை போன்று வேடமிட்டு நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் முதலில் பயந்து விட்டேன். என்றாலும் அதன்பிறகு அந்த கேரக்டரை என் மனதில் உள்வாங்கி எனக்கு நானே ஒரு தைரியத்தை வர வைத்துக் கொண்டு அதில் நடித்தேன். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.