தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
‛நாதஸ்வரம்' தொடரின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரீருத்திகா. தொடர்ந்து சீரியல்களில் நடித்து தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக மகராசி தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர், அந்த தொடரில் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீருத்திகா மற்றும் ஆர்யன் என இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் ஸ்ரீருத்திகா தான் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சின்னத்திரை பிரபலங்கள் அசார், அஸ்வத், ஸ்ருதிராஜ், நேஹா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதை தொடர்ந்து பல ரசிகர்களும் ஸ்ரீருத்திகா - ஆர்யன் தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.