ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனது அப்பா அம்மாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அஷ்வத் மாரிமுத்து. அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் பெற்றோரை சந்தித்தேன். மாரிமுத்து என்கிற தனபால். மேலும் அப்பா எங்கு போனாலும் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா எனது அம்மா. டிராகன் படம் வெளியானதும் என் பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். காரணம் நான் பிளஸ் டூ முடித்த பிறகு அவர்கள் என்னை டாக்டராக பார்க்க விரும்பினார்கள். ஆனால் நான் இன்ஜினியரிங் மாணவராக இருந்தேன். அதற்காகத்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.