ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள், ஓரளவிற்கு வாரிசு நடிகைகளும் இருக்கிறார்கள். சினிமாவில் நுழைவதற்கு வேண்டுமானால் 'வாரிசு' என்பது எளிதாக இருக்கலாம். ஆனால், நிலைத்து நிற்க தனித் திறமை வேண்டும்.
நிறைய படங்களுக்கு நடன இயக்குனராகப் பணி புரிந்த சுந்தரம் மாஸ்டரின் மகன்களான ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் ஆகியோர் சினிமாவில் அறிமுகமானார்கள். ராஜு சுந்தரம், பிரபுதேவா இருவரும் நடன இயக்குனர்களாக பல மொழிகளில் பணியாற்றி உள்ளார்கள். பிரபுதேவா கதாநாயகனாக உயர்ந்து, இயக்குனராக ஹிந்தி வரையிலும் சென்றார். நாகேந்திர பிரசாத் நடனத்துடன் அவ்வப்போது நடித்தும் வருகிறார். வாரிசுகளாக வந்தாலும் இவர்கள் தங்களது தனித் திறமைகளால் புகழ் பெற்றனர்.
பிரபுதேவா, அவரது முதல் மனைவி ரமலத் ஆகியோரது மகன் ரிஷி ராகவேந்தர் தேவா. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் ரிஷி மேடையேறி அப்பாவுடன் நடனமாடினார். அந்த வீடியோவைப் பகிர்ந்து, “எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை வெளிச்சத்தின் முன்பு முதல் முறையாகப் பகிர்ந்து கொள்வதில் பெருமை. இது நடனத்தை விட அதிகம். இது பெருமை, ஆர்வம், இப்போது ஆரம்பமாகும் பயணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் ரிஷி ராகவேந்தர் தேவாவை கதாநாயகனாகப் பார்க்கலாம்.