ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு நடிகர் அருண் விஜய்யின் சினிமா கேரியர் பீக்கானது. அவர் கதாநாயகனாக நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவருக்கென தனி இடம் உள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர படங்களில் அருண் விஜய் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் இயக்கி, நடித்து வரும் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு அருண் விஜய்யை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர். இதற்காக அவர் மிகப்பெரிய சம்பள தொகையை கேட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால், அவர் இன்றும் ஒப்பந்தம் ஆகவில்லை என கூறப்படுகிறது.