உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா குறித்த படிப்பை படித்துவிட்டு கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள ஜேசன் சஞ்சய் அதையடுத்து லைகா நிறுவனத்தில் ஒரு கதை சொல்லி, அதில் நடிப்பதற்கு பல நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்தவர் இறுதியில் சந்தீப் கிஷனிடம் சொல்லி ஓகே செய்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருடக்கணக்கில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாததால் இப்படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது வெளியே வந்த அவரிடத்தில் , விஜய் மகன் படத்தில் நடிக்கிறீர்களே. படப்பிடிப்பு தொடங்கி விட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சந்தீப், ‛‛விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். ஜேசன் சஞ்சய் என்று அவரது பெயரை சொல்லுங்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படமாக வரும் என்று நம்புகிறேன்'' என்றார்.