சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'இருட்டு அறையில் முரட்டு குத்து' தற்போது வெளிவந்துள்ள 'பயர்' மாதிரியான அடல்ட் கண்டன்ட் படம் அந்த காலத்திலும் வெளிவந்துள்ளது. காட்சிகள் ஆபாசமாக இல்லா விட்டாலும் வசனங்களும், படத்தின் கதை, திரைக்கதையும் அடல்ட் கண்டன்ட்டாக இருக்கும்.
அப்படி ஒரு படமாக வெளியாகி பொதுமக்களிடமிருந்தும், சினிமா பார்வையாளர்களிடமிருந்தும் வெறுப்பை சம்பாதித்த படம் 'முத்து எங்கள் சொத்து'. 1983ம் ஆண்டு ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய இந்த படத்தில் பிரபு, ராதா, ராஜீவ், வேணு அரவிந்த், கீதா, கே.ஏ. தங்கவேலு, மனோரமா, அனுராதா, வனிதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.என்.பார்வதி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 1983ம் ஆண்டு வெளியானது.
கதைப்படி பூர்ணம் விசுநாதனுக்கு ராஜீவும், வேணு அரவிந்தும் மகன்கள். இருவருமே ஜாலி பேர்வழிகள். அப்பாவின் சொத்துக்களை சுரண்டி, நடன அழகி அனுராதாவிடம் கொடுத்து அவர் அழகில் மயங்கி கிடப்பவர்கள்.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் பூர்ணம் விஸ்வநான். இருவரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ அந்த குழந்தைக்கே எனது சொத்துக்கள் சொந்தம் என்று கூறிவிடுகிறார். இதனால் இருவரின் மனைவிகளும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள போட்டி போட்டு கணவன்மார்களை 'கட்டில் டார்ச்சர்' செய்வதுதான் திரைக்கதை. இந்த பிரச்சினையை அந்த வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் முத்துவும்(பிரபு) அவர் காதலிக்கும் சமையல்காரி ராதாவும் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பது கதை.
பஞ்சு அருணாசலம் நேரடியாகவே ஆபாச வசனங்களை எழுதி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். நல்ல படங்களை இயக்கி பெயரெடுத்த ரங்கராஜன் இந்த படத்தையும் எடுத்து வாங்கி கட்டிக் கொண்டார். எப்படி இருந்தாலும் படம் 100 நாளை தாண்டி ஓடி விழாவும் கொண்டாடியது.