சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இரு பெரும் இதிகாசங்களான 'ராமாயணம், மகாபாரதம்' ஆகியவற்றைத் தழுவி டிவி தொடர்கள், வெப் தொடர்கள், திரைப்படங்கள் என வந்துள்ளன. 'ராமாயணம்' கதையை பிரபல ஹிந்தி இயக்குனரான நிதிஷ் திவாரி தற்போது 'ராமாயணா' என்ற பெயரில் இரண்டு பாகத் திரைப்படங்களாக எடுத்து வருகிறார்.
ராமாயணத்தை மையமாக வைத்து விதவிதமாக எவை வந்தாலும், 'டிடி நேஷனல்' டிவியில் 1987ம் ஆண்டில் ஒளிபரப்பான 'ராமாயண்' தொடரை மிஞ்சும் அளவுக்கு எதுவும் இதுவரை வரவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அத்தொடரில் சீதாவாக நடித்த தீபிகா கூறியதாவது, ''ராமாயணத்தை மையமாக வைத்து உருவான ஒரு டிவி தொடரில் கவுசல்யா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள். எனது கணவர் என்னையே முடிவெடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், எனது சகோதரர், 'நீங்கள் சீதாவாக அறியப்பட்டவர். சாகும் வரை சீதாவாகவே இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.
இத்தனை ஆண்டு காலமாக ரசிகர்கள் மனதில் நான் சீதாவாகவே இருக்கிறேன். அந்த இமேஜை நான் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும். நான் சீதா தான், அதை ஏற்றுக் கொண்டுள்ளேன். 38 வருடங்களாக மக்கள் என்னை இன்னும் அப்படியேதான் ஞாபகம் வைத்துள்ளார்கள்,'' என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா தமிழில் 'பெரிய இடத்து பிள்ளை, நாங்கள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.