ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் பாலாஜி முருகதாஸ். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குள்ளாகி சமீபத்தில் வரவேற்பை பெற்ற பயர் படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்துள்ளார். மாடலிங்கில் தன் கேரியரை ஆரம்பித்த இவர் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அதன் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டார். இதில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டமும் வென்றார். தற்போது பயர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸ் அண்மையில் மாடலிங் மற்றும் சினிமா துறையில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், 'ஆரம்பத்தில் மாடலிங் வாய்ப்பு தருவதாக சொல்லி வேறு படம் எடுக்க என்னை தயார் செய்தார்கள். மாடலிங் வாய்ப்பு கேட்கும் சில இடங்களில் வேறு ஒரு விஷயத்தை என்னிடம் எதிர்பார்த்தார்கள். ஓப்பனாகவும் கேட்டார்கள். அதை இப்போது நான் இங்கே சொல்ல முடியாது. எனக்கு பின்னாடி பேசியவர்களுக்கும், தூரோகம் செய்தவர்களுக்கும் என்னுடய அடுத்த படம் தான் பதில். நான் வளரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நான் இப்படியே இருக்கமாட்டேன். எல்லா தடைகளையும் தகர்த்து வெற்றி பெறுவேன்' என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டால் ஒரு கோடி கிடைக்கும் என நினைத்து கலந்து கொண்டேன். ஆனால், எனக்கு அவர்கள் 45 லட்சம் தான் சம்பளமாக தந்தார்கள் என்றும் அந்த நிகழ்ச்சி மேடையிலேயே பாலாஜி முருகதாஸ் ஓப்பனாக கூறியுள்ளார்.