தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் மிகப்பெரிய இன்ப்ளூயன்ஸராக மாறியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து பல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு, யூ-டியூப் மற்றும் சோஷியல் மீடியாவிலும் இன்ப்ளூயன்ஸராக வளர்ந்துள்ளார். 3 வீடுகள், இரண்டு கார்கள், ஒரு சொகுசு பைக் என உல்லாசமாக வாழ்ந்து வரும் மணிகேலை தனக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள விருப்பமில்லை என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய மணிமேகலை, ''நான் மியூசிக் சேனலில் மட்டும் தான் தொகுப்பாளினியாக வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதன்பிறகு மற்ற இரண்டு சேனல்களிலும் தானாக தான் வாய்ப்பு வந்தது. இது ஒருபுறமிருக்க எனக்கு சினிமாவிலுமே வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு சினிமாவில் போவதற்கு விருப்பமில்லை. நான் இப்படியே ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு சினிமா சரிப்பட்டு வராது.
எனக்கு நடிக்கவும் தெரியாது, சுத்தமாகவும் எனக்கு வராது. என் கணவருக்கு அந்த பீல்டில் ஆசை இருக்கிறது. இப்போது ஷார்ட் பிலிம்களில் நடித்து கொண்டிருக்கிறார். எனக்கு அந்த பீல்டில் சுத்தமாக விருப்பமில்லை. அதனால் நான் நடிக்கவில்லை'' என அதில் கூறியிருக்கிறார்.