விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த மான்யா ஆனந்த் தமிழில் வானத்தைப் போல தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வந்த ஸ்வேதா விலகியவுடன் அவருக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த மான்யாவிற்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், போக போக ஸ்வேதாவை விட மான்யா தான் துளசி என்ற கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அந்த தொடர் முடிவுக்கு வந்தவுடன் தமிழில் வேறு எந்த சீரியலிலும் அவர் நடிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மீண்டும் அவரது என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே மான்யா ஆனந்த், ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி, சூர்யவம்சம் ஆகிய தொடர்களை தயாரித்திருந்த மங் ஸ்டூடியோ நிறுவனம் தான் இந்த புதிய தொடரை தயாரிக்க உள்ளது. மிக விரைவில் இந்த தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.