அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
இளம் வயதிலேயே இசையில் சாதனை படைத்தவர் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். மோகன்லால் இயக்கிய 'பரோஸ்' படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இதற்கிடையில் லிடியன், சிம்பொனி இசை அமைக்க இருப்பதாகவும், அவரை இளையராஜா சிம்பொனி இசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை இளையராஜா மறுத்துள்ளார். லிடியன் அமைத்திருப்பது சிம்பொனி அல்ல வெறும் சினிமா இசை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே, இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள் அதன் பிறகு கம்போஸ் பண்ணு என்று சொன்னேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்திற்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக் கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன்" என்றார்.