ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது இன்னும் ஸ்பெஷல். 1965 காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். குரு சோமசுந்தரம் ஜோக்கர், மின்னல் முரளி, பாட்டில் ராதா, குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் அவரின் அசாத்திய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர்த்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப் என்பவரும் இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்த பசில் ஜோசப் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.