படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராக பெண் திரை கலைஞர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளார்.
சமீபத்தில் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார் சமந்தா. இவர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். சமந்தாவே இதில் கதையின் நாயகியாக நடிக்க போகிறார். இந்த படத்தில் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.
இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறுகையில், ‛‛நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இதில் பணியாற்றும் ஆண் கலைஞர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுமோ அதே சம்பளம் தான் பெண் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்து செய்யவில்லை'' என்றார்.
சமந்தாவின் இந்த விஷயம் பாராட்டுகளை பெற்று வருகிறது.