கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா |
பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கி வருகிறார். இவர் நடிக்கும் பாக்கியலெட்சுமி தொடர் தமிழக மக்களிடம் இவருக்கு அதிக பெயர் புகழை தந்துள்ளது. அதுபோல, இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமாக காரணம் வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் தான்.
இந்நிலையில், அண்மையில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் திரையுலக வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக பிரபலத்தை தந்த புஷ்பா கேரக்டர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'புஷ்பா கேரக்டரில் முதலில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தேன். ஆனால், இயக்குநர் கிளாமர் சீன் எதுவுமில்லை பண்ணிகொடுங்க என்று சொன்னார். அதனால் தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஹீரோயின் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை' என்று கூறியுள்ளார்.