ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஒரு டானாக தோன்றும் அஜித் குமார், பின்னர் அந்த வன்முறை வாழ்க்கையில் இருந்து விலகி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் நேரத்தில் கடந்த காலத்தில் அவர் செய்த வன்முறை சம்பவங்கள் மீண்டும் அவரை துரத்துவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்திலும் கேங்ஸ்டராக நடித்திருக்கும் சூர்யா, ஒரு கட்டத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முடிவெடுப்பாராம். ஆனால் அதற்கு முன்பு அவர் செய்த அத்தனை பிரச்னைகளும் ஒன்று சேர்ந்து அவரை துரத்த, மீண்டும் அவர் கேங்ஸ்டராகவே மாறுவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ என்ற இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. என்றாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இந்த படங்கள் திரைக்கு வரும் போது தான் தெரியவரும்.