தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தெலுங்கு நடிகரும், முன்னாள் அரசியல்வாதி, முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு 'யுனைட்டட் கிங்டம்' பார்லிமென்ட்டில் மார்ச் 19ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. சமுதாயத்திற்கு சிறப்பான பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. பார்லிமென்ட் உறுப்பினர்களால் இந்த விழா ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
'பிரிட்ஜ் இந்தியா' அமைப்பும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. இது சினிமாவிற்காக மட்டுமல்லாமல், பொது சேவைக்காகவும், கலாச்சார தலைமைத்துவத்திற்காகவும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் யுகே குடியுரிமை சிரஞ்சீவிக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதை அவரது குழுவினர் மறுத்தனர். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சிரஞ்சீவிக்கு பாராட்டும், விருது வழங்குவதும் நடைபெற உள்ளது.