தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் 'புஷ்பா', 2024ல் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை புரிந்தது.
அப்படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 3' படம் 2028ம் ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், ''புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அட்லி,
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி
இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார்.
இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு 'புஷ்பா 3'
படத்திற்கான வேலைகளை துவங்குவார். 2028ல் 'புஷ்பா 3' திரையரங்கிற்கு
வரும்" எனக் கூறியுள்ளார்.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையிலும் மூன்று வருட இடைவெளி இருந்தது. ஆனால், மூன்றாம் பாகத்திற்கான இடைவெளிக்கு அல்லு அர்ஜுன் வேறு இரண்டு படங்களில் நடிக்க இருப்பதுதான் காரணம்.
மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட்டைத் தயாரிப்பாளர் தந்ததற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.