வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

2005ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் 'அத்தடு'. திரிவிக்ரம் இயக்கிய இந்த படத்தில் மகேஷ் பாபு, திரிஷா, பிரகாஷ்ராஜ், சோது சூட், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், மணிசர்மா இசை அமைத்திருந்தார். வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் 'நந்து' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இங்கு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் 'அத்தடு' படம் தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பப்பட்ட முதல் படம் என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இத்தனை முறை எந்த படமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான ஆதாரங்களோடு படக் குழுவினர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளனர்.