ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், சபீர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'சார்பட்டா பரம்பரை'. வட சென்னை கதைக்களத்தில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை பா.ரஞ்சித்தும், ஆர்யாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டது.
இந்த படத்தை 80 கோடி பட்ஜெட்டில் நீலம் புரொடக்சனுடன் சேர்ந்து மூன்று நிறுவனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதில், ஜீ நிறுவனம் தற்போது விலகி விட்டதாம். அதன் காரணமாகவே புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறாராம் பா.ரஞ்சித். இப்படி இந்த படம் ஆரம்பகட்ட பணிகளோடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் சார்பட்டா பரம்பரை-2 படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.