'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ராஜா(மோகன் ராஜா) இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ரவி மோகன்(ஜெயம் ரவி), அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'எம் குமரன் S/o மகாலட்சுமி'. தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளிவந்த 'அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' படத்தின் ரீமேக்காக வெளிவந்த படம்.
ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கேற்றபடி படத்தை மாற்றியமைத்து சிறப்பான படமாகக் கொடுத்திருந்தார் ராஜா.
20 வருடங்களுக்குப் பிறகு அப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தில் ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நதியா இது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “எனக்குப் பிடித்த எம்.குமரன் S/o மகாலட்சுமி… என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது. எல்லா வயதினரையும் கவர்ந்த மறக்க முடியாத ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு இனிய அனுபவமாக இருந்தது” என குழுவினருக்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார்.